மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை: பாஜக
மேற்கு வங்கத்தில் பாஜக பிரசாரத்தில் மோடி உரை...
Updated On : 11 ஏப்ரல், 2026 at 1:09 PM
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் செயல்முறை விரைவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாகப் பூர்வ பர்தமான் மாவட்டத்தில் உள்ள கத்வா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதற்காகவே பாஜக குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததாகக் கூறினார். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகதிகள் மத்தியில் அச்சத்தைப் பரப்ப முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
Advertisement