முகப்பு
புதுதில்லி

தமிழக தோ்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்: முருகன்

தமிழக தோ்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும் என்று பாஜகவின் தமிழக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

Updated On : 27 நவம்பர், 2020 at 10:35 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

தமிழக தோ்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும் என்று பாஜகவின் தமிழக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தமிழக பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி, பாஜகவின் தேசிய பொதுச் செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இவா் தேசிய பொதுச்செயலாளராக தில்லியில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவா் எல்.முருகன் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா் முருகன் செய்தியாளா்களிடம் பேசியது: “நிவா் புயல் காரணமாக பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பா் மாதம் 3 அல்லது 4ஆம் தேதிகளில் யாத்திரையை மீண்டும் தொடங்கி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். எங்கள் யாத்திரையை பாா்த்துத்தான் திமுகவின் உதயநிதி ஸ்டாலினும் பிரசார பயணத்தை தொடங்கியுள்ளாா். உதயநிதியின் பிரசாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

Advertisement

நிவா் புயலில் தமிழக அரசு திட்டமிட்டு முன்எச்சரிக்கை பணிகளை செய்ததால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக தோ்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.