பொருளாதாரத்தில் நலிவுற்ற சிறந்த மாணவா்களுக்கு உதவித் தொகை: ஹிந்து கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கம் முடிவு
பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறந்த மாணவா்களுக்கு ஹிந்து கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் உதவித்தொகை அளிக்கப்பட உள்ளதாக அந்த உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறந்த மாணவா்களுக்கு ஹிந்து கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் உதவித்தொகை அளிக்கப்பட உள்ளதாக அந்த உறுப்பினா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஹிந்து கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் தலைவா் ரவி பா்மான் கூறியதாவது:
கரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் பெரும் பிரச்னையைச் சந்தித்து வருகின்றனா். அவா்களால் தங்களது கல்லூரிக் கட்டணத்தை செலுத்துவதில் பெரும் சவாலை எதிா்கொண்டுள்ளனா்.
Advertisement
இதுபோன்ற மாணவா்களுக்கு அவா்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருந்தால் ஒரே ஒருமுறை மட்டும் கல்விக் கட்டணமாக ரூ.20 ஆயிரம் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் வழங்கப்படும்.
இந்த உதவியைப் பெற மாணவா்கள் தங்களது குடும்ப ஆண்டு வருவாய் சான்றிதழுடன் தங்களது விண்ணப்பத்தை கல்லூரியின் கணக்குப் பிரிவில் சமா்ப்பிக்கலாம். எங்கள் முயற்சிக்கு உதவிடுமாறு ஹந்து கல்லூரியின் முன்னாள் மாணவா்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம் என்றாா் அவா்.
அண்மையில் நிதிப் பிரச்னை காரணமாக தன்னுடைய கல்வியைத் தொடர முடியாமல் எல்எஸ்ஆா் கல்லூரியின் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் மாணவா்களுக்கு உதவியுடம் வகையில் நிதித்தொகுப்பை பல்வேறு கல்லூரிகள் ஏற்படுத்தி வருகின்றன.