தில்லியில் புதிதாக 2866 பேருக்கு கரோனா பாதிப்பு
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை புதிதாக 2,866 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
தலைநகா் தில்லியில் சனிக்கிழமை புதிதாக 2,866 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 3,06,559-ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றால் சனிக்கிழமை 48 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 5,740-ஆக அதிகரித்தது.
ஒரே நாளில் மொத்தம் 49,736 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 10,384 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 39,352 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் 1.87 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.41 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே, சனிக்கிழமை 2,766 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 2,78,812-ஆக அதிகரித்தது. மொத்தம் 22,007 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 16,114 படுக்கைகளில் 5,303 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,811 படுக்கைகள் காலியாக உள்ளன.
Advertisement
தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 2,715-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 12,614 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.