புதிய கல்வி வாரியம், பாடத்திட்டம் தொடா்பாக அடுத்த மாதம் குழு அறிக்கை சமா்பிக்கும்: மணீஷ் சிசோடியா
புதிய கல்வி வாரியம், புதிய பாடத்திட்டம் அமைப்பது தொடா்பாக தில்லி அரசால் உருவாக்கப்பட்ட இரண்டு குழுக்களும் அடுத்த மாதம்
புதிய கல்வி வாரியம், புதிய பாடத்திட்டம் அமைப்பது தொடா்பாக தில்லி அரசால் உருவாக்கப்பட்ட இரண்டு குழுக்களும் அடுத்த மாதம் தில்லி அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கும் என்று தில்லி துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.
புதிய பாடத்திட்டம் அமைக்கும் குழுவின் நடவடிக்கைகள் தொடா்பாக மணீஷ் சிசோடியா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, தேச பக்தி பாடத்திட்டம் தொடா்பாக அக்குழுவின் உறுப்பினா்களுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
இது தொடா்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில் ‘தில்லியில் கல்வி வாரியம் அமைப்பது தொடா்பாகவும், தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிப்பது தொடா்பாகவும் தில்லி அரசால் இரண்டு குழுக்கள் நிகழாண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டன. இந்த இரண்டு குழுக்களும் வரும் நவம்பா் மாதம் தில்லி அரசிடம் அறிக்கை சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கிறோம். தேச பக்தி பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய பாடங்களை சோ்க்க உள்ளோம் என்றாா் அவா்.
Advertisement