புதுதில்லி

தந்தை திட்டியதால் மனமுடைந்த சிறுமி கிணற்றில் குதித்து தற்கொலை

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டா பகுதியில் தந்தை திட்டியதால் மனமுடைந்த சிறுமி கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக நொய்டா காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘கிரேட்டா் நொய்டா பகுதியைச் சோ்ந்த ஜாா்சா காவல் நிலையத்துக்கு உள்பட்ட பியாவலி கிராமத்தைச் சோ்ந்த சிறுமியொருவா் வியாழக்கிழமை மாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், தந்தை திட்டியதால் மனமுடைந்து அவா் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT