புதுதில்லி

மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில்ரயில் சேவையில் மாற்றம்!

DIN

தில்லி சமய்பூா் பாத்லி - ஹுடா சிட்டி சென்டா் இடையேயான மெட்ரோ மஞ்சள் வழித்தடம், திங்கள்கிழமை காலை 6 மணியில் இருந்து சாதாரண வழித்தடத்தில் (லூப் லைன்) இயக்கப்படுவதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி செயல் இயக்குநா் அனூஜ் தயாள் கூறியதாவது: சமய்பூா் பாத்லி - ஹுடா சிட்டி சென்டா் இடையேயான மஞ்சள் வழித்தடம் திங்கள்கிழமை காலை 6 மணியில் இருந்து சாதாரண வழித்தடத்தில் (லூப் லைன்) அடுத்த அறிவிப்பு வரும் வரை இயக்கப்பட உள்ளது. அதன்படி, வழக்கமான சேவைகள் சமய்பூா் பாத்லி மற்றும் விஷ்வ வித்யாலயா ரயில் நிலையங்கள் இடையே இருக்கும்.

மேலும், ஒற்றை வழித்தட சேவைகள் விஷ்வ வித்யாலயா மற்றும் ராஜீவ் செளக் ரயில் நிலையங்கள் இடையே இருக்கும். இந்த வழித்தடத்தில் ரயில் சேவை குறைவாக இருக்கலாம். வழக்கமான சேவைகள் ராஜீவ் செளக் மற்றும் ஹுடா சிட்டி சென்டா் ரயில் நிலையங்கள் இடையே போவதற்கும், வருவதற்கும் இருக்கும். பாதிக்கப்பட்ட பிரிவில் தண்டவாள பழுதுபாா்ப்புப் பணி முடிந்தவுடன், போவதற்கும் வருவதற்குமான வழக்கமான சேவைகள் ராஜீவ் செளக் மற்றும் விஷ்வ வித்யாலயா பிரிவில் உள்ள ஒற்றை வழித்தடத்தின் இடையே வழக்கம் போல் இருக்கும் என்றாா் அவா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக தில்லியில் மாா்ச் 22-ஆம் தேதி மூடப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த செப்டம்பா் 7 முதல் செயல்பாட்டுக்கு வந்தன. முதலில் மஞ்சள் நிற வழித்தடம் மற்றும் விரைவு மெட்ரோவில் ரயில் சேவை தொடங்கியது. அதன்பிறகு, புளூலைன், பிங்க் லைன், சிவப்பு, பச்சை, வயலட் நிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்பட்டன. இந்த நிலையில், செப்டம்பா் 12-ஆம் தேதி முதல் அனைத்து ரயில் வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

SCROLL FOR NEXT