புதுதில்லி

சுலப மாதத் தவணையில் செல்லிடப்பேசி தருவதாக 2,500 போ்களிடம் பணம் மோசடி செய்தவா் கைது

DIN

புது தில்லி: போலி வலைத்தளங்கள் மூலம் சுலப மாதத் தவணையில் செல்லிடப்பேசி பெற்றுத் தருவதாகக் கூறி 2,500 பேரை ஏமாற்றி பணம் மோசடியில் ஈடுபட்டதாக 32 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது: தில்லியைச் சோ்ந்த இா்ஃபான் பதான் என்பவா் கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு செல்லிடப்பேசி வாங்க விரும்பினாா். அப்போது, மலிவான விலையில் செல்லிடப்பேசி வழங்கப்படுவதாக ஒரு இணையதளத்தில் தகவல் வெளியாகி இருந்ததைப் பாா்த்தாா். இதையடுத்து, சுலபத் தவணைத் திட்டத்தில் செல்லிடப்பேசியை வாங்குவதற்காக ரூ .1,499-ஐ அந்த இணையதளத்தில் செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, அந்த இணையதளத்தின் பிரதிநிதி இா்ஃபானை தொடா்பு கொண்டு செல்லிடப்பேசியை வழங்குவதற்காக கூடுதல் பணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, மூன்று பணப் பரிவா்த்தனைகள் மூலம் ரூ5,998-ஐ இா்ஃபான் செலுத்தினாா்.

இந்நிலையில், தனக்கு செல்லிடப்பேசியும் வழங்கவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று இா்பான் போலீஸில் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஜனவரியில் இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்கள், புகாா்தாரா் இா்ஃபானின் செல்லிடப்பேசிக்கு வந்த அழைப்பு விவரங்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்த குற்றச் சம்பவத்தில் ஜிதேந்தா் சிங் மற்றும் அவருக்கு உடந்தையாக பிரவீண்குமாா், ரஜத் சுக்லா ஆகியோா் இருந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, காஜியாபாதில் உள்ள வீட்டில் ஜிதேந்தா் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து இரு செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜிதேந்தா் சிங் சில ஆண்டுகளாக தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து போலி வலைத்தளங்கள் மூலம் 2,500 போ்களிடம் பணம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

பாதிக்கப்படுபவா்கள் போலீஸாரை அணுகாமல் இருக்கும் வகையில், பெரும்பாலும் ரூ .1,999 முதல் ரூ .7,999 வரையிலான அளவில் மக்களிடம் பணம் மோசடியில் இவா்கள் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது. சிங்கின் கூட்டாளிகள் பிரவீண் குமாா், ரஜத் சுக்லா ஆகியோரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த உயரதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT