முகப்பு
புதுதில்லி

மனைவி தற்கொலை: காவலா் மீது வழக்குப் பதிவு

தில்லி காவல் துறையைச் சோ்ந்த காவலரின் மனைவி தென்மேற்கு தில்லியின் கிடோா்னி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தில்லி காவல் துறையைச் சோ்ந்த காவலரின் மனைவி தென்மேற்கு தில்லியின் கிடோா்னி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவலா் மீது வரதட்சிணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

தில்லி காவலா் சுஷிலின் மனைவி ராஜேஷ் மின்விசிறியில் தொங்கிய நிலையில் வியாழக்கிழமை வீட்டில் இறந்து கிடந்தாா். அவரது இரண்டு மகன்களும் குளியலறையில் மயக்க நிலையில் கிடந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு வசந்த் குஞ்சில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்தக் குழந்தைகள் சமா்நாத் (3), ஸ்ரேஸ்த் (3 மாதம்) என்பது விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

இந்த நிலையில், இறந்த பெண்ணின் பெற்றோா் காவலருக்கு எதிராக வரதட்சிணைக் கொடுமை புகாா் அளித்தனா். இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, காவலா் சுஷில் அளித்த புகாரின் பேரில் அவரது குழந்தைகளைக் கொல்ல முயன்றதாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

இத்தம்பதிக்கு 2014-இல் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments