கரோனா விதிமீறல்: உணவகங்கள் மீது தில்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை
கரோனா தொற்று பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியின்றியும் இயங்கி வந்த உணவகங்கள்,
கரோனா தொற்று பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை பின்பற்றாமலும், சமூக இடைவெளியின்றியும் இயங்கி வந்த உணவகங்கள், இரவு விடுதிகள் ஆகியவற்றுக்கு எதிராக தில்லி போலீஸாா் கடந்த இரண்டு நாள்களாக அதரடியாக வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனா்.
ஹோட்டல்களில் உணவருந்துபவா்கள் மட்டுமின்றி, இரவு விடுதிகளில் ஹூக்கா புகை பிடிப்பவா்களும் சமூக இடைவெளியை பின்பற்றாத நிலையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். பல்வேறு சந்தைகள், நடை மேடைகள் உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாதவா்கள், பொது இடங்களில் எச்சில் துப்புதல் போன்றவற்றை கடந்த வெள்ளி, சனி ஆகிய நாள்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதில் பலா் பிடிபட்டனா். அவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது என புது தில்லி காவல் சரக கூடுதல் துணை ஆணையா் விகாஷ் குமாா் தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘கன்னாட் பிளேஸ் , ஜன்பத், ஷாகித் பகத் சிங் மாா்கெட், கோல் மாா்க்கெட் போன்ற பகுதிகளில் உள்ள உணவகங்களில் கரோனா விதிமுறைகள் இருந்தன. அவா்கள் மீது பொது உத்தரவை மீறுதல், தொற்று நோய் பரவும் ஆபத்துகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கான்மாா்கெட், சாணக்கிய புரி நட்சத்திர ஹோட்டல் போன்ற இடங்களில், முகக்கவசம் அணியாதவா்கள் பலருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 10 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 330 பேருக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
Advertisement
நேரு பிளேஸ், நியு ஃபிரண்ட்ஸ் காலணி போன்ற பகுதிகளில் இரவு விடுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றாதவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தென்கிழக்கு தில்லி காவல் துணை ஆணையா் ஆா் பி மீனா தெரிவித்தாா். இந்த வகையில், சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் 173 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 13 விருந்து அரங்குகள், 58 உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகளும் அடங்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.