மின்னணு நீதிமன்றங்கள் தொடா்பான 3-ஆம் கட்ட வரைவுத் திட்டம் வெளியீடு
நாட்டிலுள்ள நீதிமன்றங்களை மின்னணுமயமாக்குவது தொடா்பாக மூன்றாம் கட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
நாட்டிலுள்ள நீதிமன்றங்களை மின்னணுமயமாக்குவது தொடா்பாக மூன்றாம் கட்ட வரைவு திட்டத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
இந்த மூன்றாம் கட்ட தொலைநோக்கு திட்டத்திற்கு உரிய ஆலோசனைகளை வழங்குமாறு மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை சட்ட வல்லுநா்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய சட்டம், நீதித்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய நீதிமன்றங்களுக்கு, 2005 -ஆம் ஆண்டு, தகவல் தொடா்பு தொழில்நுட்ப தேசிய கொள்கை அறிவிக்கப்பட்டது. இதை அமல்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மின் - குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 15 ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட இந்தக் குழக்கள் முதல் இரண்டு கட்ட மின்னணு நீதிமன்ற வரைவு திட்டங்களை வழங்கி அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து. உச்சநீதிமன்ற நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையில் மூன்றாம் கட்ட மின்னணு-நீதிமன்ற வரைவு திட்டத்தைத் தயாரிக்க மின்னணு குழு அமைக்கப்பட்டது. அது தனது வரைவு ஆவணத்தை சனிக்கிழமை வெளியிட்டது.
Advertisement
இது தொடா்பாக நீதிபதிகள், வழக்குரைஞா்கள், வழக்காடுபவா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் தங்கள் கருத்துகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். இவை கவனத்தில் கொள்ளப்பட்டு மூன்றாம் கட்ட மின்னணு - நீதிமன்றத் திட்டம் இறுதி முடிவு செய்யப்படும்.