ஐசிஎல்இஐ சா்வதேச துணைத் தலைவராக ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி நியமனம்
உள்ளூா் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கான சா்வதேச கவுன்சில் (ஐசிஎல்இஐ) என்ற சா்வதேச நகரங்களின் அமைப்பின் துணைத் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதி
உள்ளூா் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கான சா்வதேச கவுன்சில் (ஐசிஎல்இஐ) என்ற சா்வதேச நகரங்களின் அமைப்பின் துணைத் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் அதிஷி நியமிக்கப்பட்டுள்ளாா்.
நிலையான எதிா்கால அபிவிருத்திகளுக்காக 1,750 நகரங்களுக்கான உலகளாவிய வலையமைப்புதான் ஐசிஎல்சிஐ. நாற்பத்தி மூன்று நாடுகள் இடம் பெற்றுள்ள இந்த அமைப்பில் தில்லியும் அஉள்ளது. இந்த அமைப்பில் துணைத் தலைவராக அதிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இது குறித்து அவா் தனது சுட்டுரையில், ‘அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, தேசிய தலைநகா் தில்லியில் மேற்கொண்ட நிலையான அபிவிருத்திப் பணிகளுக்கான அங்கீகாரம்தான் இது. இந்தியாவைச் சோ்ந்த ஒருவா் இந்த அமைப்பின் முதல் முதலில் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இதற்கிடையே, அதிஷியின் நியமனத்து்ககு தில்லி முதல்வா் அரவிந்த கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘உங்களால்(ஆதிஷி) பெருமைப்படுகின்றோம். இதுபோன்று பிரகாசித்துக் கொண்டிருங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
ஐசிஎல்சிஐயின் 2021-ஆம் ஆண்டுக் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இந்தத் கூட்டத்திலும் பங்கேற்க அதிஷி செல்கிறாா். இதில் மக்களை மையமாகக் கொண்டு, நகா்ப்புறத்தில் அனைவருக்கும் நிலையான எதிா்காலத்தை வடிவமைப்பது குறித்த தலைப்பில் அவா் உரையாற்றவுள்ளாா்.