தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: நரேலாவில் 41.9 டிகிரி பதிவு
தில்லியில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 4 டிகிரி அதிகரித்து 40.2 டிகிரி செல்சியஸாக பதிவானது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 4 டிகிரி அதிகரித்து 40.2 டிகிரி செல்சியஸாக பதிவானது. அதேவேளையில், குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியைவிட ஒரு டிகிரி குறைந்திருந்தது.
தில்லி மற்றும் தேசியத் தலைநா் வலயப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாகப் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி குறைந்து 19.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 40.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 39 சதவீதமாகவும், மாலையில் 23 சதவீதமாகவும் இருந்தது. இதேபோன்று அதிகபட்ச வெப்பநிலை ஆயாநகரில் 40.4 டிகிரி, லோதி ரோடு பகுதியில் 39.4 டிகிரி, நரேலாவில் 41.6 டிகிரி, பாலத்தில் 40.8 டிகிரி, ரிட்ஜில் 41 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு மாலை 7.30 மணியளவில் 225 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்துள்ளது.
Advertisement
முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை (ஏப்ரல் 14) வானம் பகுதி அளவு மேக மூட்டமாக காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.