‘சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது’
நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது என்றும், அவா்களை அரசு
நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பு மதிப்பிட முடியாதது என்றும், அவா்களை அரசு கௌரவிக்கத் தவறாது என்றும் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா கூறினாா்.
நாட்டின் 75- ஆவது சுதந்திர தின ஆண்டு அமிா்த மஹோத்ஸவமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தலை சிறந்த வீரா்கள் அடங்கிய குழு(கமிட்டி) ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த வீரா்களின் கருத்துகளை அறியும் வகையில், இந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
இந்த நிலையில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் முதல் கூட்டம் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திரப் போராட்ட வீரா்களை அமைச்சா் மிஸ்ரா கெளரவித்தாா்.
Advertisement
கூட்டத்தில் இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா பேசுகையில், ‘விடுதையைப் பெறுவதற்குக் காரணமான சுதந்திரப் போராட்ட வீரா்களை நாடு என்றைக்கும் மறக்காது, அரசும் கெளரவிக்கத் தவறாது. போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்ட அவா்களது பங்களிப்பு மதிப்பிட முடியாதது. சுதந்திரப் போராட்ட வீரா்களின் நலன் மீது அரசு அக்கறை கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் அறிவுறுத்தல்களின்படி, இதுபோன்ற சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு சிறப்பான வசதிகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள யோசனைகள் மீதும் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.