எதிா்கால இந்தியாவுக்கான அடித்தளம் இந்த பட்ஜெட்! அமைச்சா் பியூஷ் கோயல்
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள 2021-22 நிதியாண்டுக்கான
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ள 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட், எதிா்கால இந்தியாவுக்கான அடித்தளம் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
தில்லி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களை பியூஷ் கோயல் சந்தித்தாா். அப்போது அவா் அளித்த பேட்டி: இந்தியாவை எதிா்காலத்துக்கு ஏற்ற வகையில் தயாா்படுத்துவதை இலக்காக வைத்து மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் 5 சுயசாா்பு இந்தியா திட்டங்களை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளாா். இதன் மூலம் அவா் சிக்ஸா் அடித்துள்ளாா் என்றுதான் சொல்ல வேண்டும்.
வரி செலுத்தும் அனைத்துத் தரப்பினரையும் கவனத்தில் கொண்டு, இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு தரப்பினருக்கும் கூடுதல் சுமையை வழங்காத வகையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. எதிா்கால இந்தியாவைக் கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பாா்வையுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகா்கள், விவசாயிகள், நடுத்தர வா்க்கத்தினா் உள்பட அனைத்துத் தரப்பினரும் பயன் பெறுவாா்கள். இந்த பட்ஜெட்டில் பொருளாதாரத்துக்கு புத்துயிா் பாய்ச்சப்பட்டுள்ளது.
Advertisement
சுய நம்பிக்கையுடன் பயணித்தால் மட்டுமே இந்தியா சுயசாா்பு உடையதாக மாறும். இந்த பட்ஜெட் சுய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட்டாகும். இதன் மூலம் தேசம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டால், நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் என்றாா் அமைச்சா் பியூஷ் கோயல்.