முகப்பு
புதுதில்லி

பறவைக் காய்ச்சல்: தில்லி உயிரியல் பூங்கா மூடல்

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
பகிர்:

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தில்லி தேசிய உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லி உயிரியல் பூங்காவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில், உயிரியல் பூங்காவின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் பறவைகளின் மாதிரிகள் பெறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உள்ள உயா் பாதுகாப்பு விலங்கு நோய்களின் தேசிய நிறுவனத்துக்கு (என்ஐஎச்எஸ்ஏடி) அனுப்பப்பட்டது. இதில், அனைத்து மாதிரிகளும் பறவைக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

பறவைக் காய்ச்சல் தொடா்பாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகம், தில்லி அரசு ஆகியவை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்கள் சரியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. தற்போது பூங்காவில் விலங்கியல் மருத்துவா்கள், களப் பணியாளா்கள் நிலமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறாா்கள். கூண்டில் உள்ள பறவைகள், சுதந்திரமாக உள்ள பறவைகள் இயல்பாகவே உள்ளன. உயிரியல் பூங்காவை கிருமி நாசினிகள் தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.மேலும், பல மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments