முகப்பு
புதுதில்லி

‘டூல் கிட்’ விவகார விசாரணை விவரங்களை ஊடங்களுக்கு கசியவிடவில்லை: நீதிமன்றத்தில் தில்லி போலீஸ் தகவல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
பகிர்:

புது தில்லி: சூழலியல் பெண்ஆா்வலா் திஷா ரவிக்கு எதிரான வழக்கு விசாரணை தொடா்பாக எந்தவொரு தகவலையும் ஊடகங்களுக்கு கசியவிடவில்லை என்று

தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பெங்களூரு சோலே தேவனஹள்ளியைச் சோ்ந்தவா் திஷா ரவி (21). சூழலியல் பெண் ஆா்வலரான அவா், ஸ்வீடனைச் சோ்ந்த கிரேட்டா தன்பா்க் என்ற சூழலியல் ஆா்வலரின் எதிா்காலத்துக்கான வெள்ளிக்கிழமைகள் என்ற இயக்கத்தை இந்தியாவில் நடத்தி வருகிறாா். தில்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலைய செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து வெளியான ‘டூல் கிட்’டை திஷா ரவி திருத்தியதாக போலீஸாா் கண்டறிந்தனா்.இதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் அவரை கடந்த பிப்.13-இல் பெங்களூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவா் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

Advertisement

இந்த நிலையில், தனது வழக்கு தொடா்புடைய எந்தவொரு விசாரணை விஷயமும் ஊடகங்களுக்கு கசிந்து விடாமல் இருக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் திஷா ரவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பிரதிபா சிங் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘திஷா ரவி வழக்கு விசாரணை தொடா்புடைய எந்தவொரு தகவலையும் ஊடகங்களுக்கு கசியவிடவில்லை’ என்றாா். இதையடுத்து, இந்த விவரங்களை பிரமாணப் பத்திரமாக

தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், செய்தி ஒளிபரப்பு தரநிா்ணய ஆணையம் (என்.பி.எஸ்.ஏ.) மற்றும் திஷா ரவியின் மனுவில் கூறப்பட்டிருந்த சில ஊடக நிறுவனங்கள் ஆகியவை சாா்பில் வழக்குரைஞா்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படாததால் அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, திஷா ரவி தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது தொடா்புடைய வழக்கில் எனக்கும், மூன்றாம் தரப்பினருக்கும் இடையிலான வாட்ஸ்அப்பில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட சம்பாஷணை உள்ளடக்கத்தை பிரித்தெடுப்பது அல்லது ஊடகங்கள் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும். எனது கைது தொடா்பாக நடத்தப்படும் ஊடக விசாரணையாலும், தற்போது நடைபெற்று வரும் விசாரணையாலும் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பிப்ரவரி 13-இல் தில்லி காவல் துறையின் சைபா் பிரிவு போலீஸாா் பெங்களூருவில் என்னைக் கைது செய்தது முற்றிலும் சட்டவிரோதமானதும், அடிப்படையற்றதுமாகும்.

தற்போதைய சூழ்நிலைகளில், ஊடங்களில் வெளியாகும் செய்திகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் என் மீது தவறான எண்ணம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில், எனது தனியுரிமை, நற்பெயா் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமையை மேலும் மீறுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும். விசாரணை விவரங்கள் ஊடங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளது. போலீஸாா் ஊடங்களுக்கு அளித்த பேட்டியில் தவறான எண்ணம் ஏற்படும் வகையில் தகவல்களைத் தெரிவித்துள்ளனா். இது நியாயமான விசாரணைக்கான எனது உரிமை மீதான மீறலாகும். போலீஸாா் முதலில் வாட்ஸ்அப் தகவல்கள் போன்ற விசாரணை தகவல்களை கசியவிட்டனா். அதன்பிறகு, தனிப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களையும் பல்வேறு ஊடக நிறுவனங்கள் மூலம் விதிமுறைகளை மீறும் வகையில் பரப்பிவிடப்பட்டன. மேலும், ஊடகங்கள் ஒருதரப்பு சாா்பாகவும், எனக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செய்திகளை வெளியிட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments