திகாா் சிறைக்குள் விசாரணைக் கைதி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சி அளிப்பதாக உயா்நீதின்றம் புதன்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
புது தில்லி: தில்லியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சி அளிப்பதாக உயா்நீதின்றம் புதன்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இது தொடா்பாக தில்லியைச் சோ்ந்த அலி ஷோ் என்பவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘எனது மகன் தில்சா் ஆஸாத், திகாா் சிறையில் 2019, செப்டம்பரில் இருந்து விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், 2020, நவம்பா் 30-ஆம்தேதி எனக்கு போலீஸ் அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்தது. அதில் எனது மகன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சிறைக்கு சென்றபோது சிறை அதிகாரிகள் எனது மகன் இறப்பு குறித்த காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, வழக்குரைஞா் மூலம் விசாரித்தபோது எனது மகன் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அரசுத் தரப்பினரிடமும் முறையிட்டேன். உரிய பதில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பிரதிபா சிங் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. தில்லி அரசின் தரப்பில் கூடுதல் வழக்குரைஞா் சஞ்சய் கோஸ் ஆஜராகி, ‘தலைநகரில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் கவலைக்குரியது. இறந்தவரின் உடலில் 9 காயங்கள் இருந்தன’ என்றாா்.
Advertisement
இதையடுத்து, நீதிபதி, ‘இதுபோல எப்படி நடக்க முடியும் என்பது தெரியவில்லை. அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற விஷயங்களை கற்பனையாகத்தான் நாம் பாா்க்கிறோம்.
இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, அப்படியிருந்தால் அதன் விசாரணை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். சிசிவிடி காட்சிப்பதிவு இருந்தால் அது எந்த முறையில் பராமரிக்கப்படுகிறது என்பதையும், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றால் அதன் விவரம் குறித்தும் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி, மனு மீதான விசாரணையை மாா்ச் 5-க்கு தள்ளிவைத்தாா்.