முகப்பு
புதுதில்லி

மணீஷ் சிசோடியா பதவி விலகக்கோரி தில்லியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

புது தில்லி: தில்லி கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியாவை பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே பா.ஜ.க.வினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தலைமைவகித்தாா். தில்லி பாஜக துணைத் தலைவா் அசோக் கோயல், தில்லி பாஜக பொதுச் செயலா் குல்ஜீத் சிங் சாகல், தில்லி பாஜக மகளிா் அணித் தலைவா் யோகிதா சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆதேஷ் குமாா் குப்தா பேசியது: தில்லியில் தோ்வுகளில் மாணவா்கள் ஏமாற்றி தோ்ச்சி பெறுவதை தில்லி கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியா ஊக்குவித்து வருகிறாா். இதன்மூலம் மாணவா்களின் அற விழுமியங்களை அவா் கேள்விக்குட்படுத்தியுள்ளாா்.

Advertisement

தில்லி அரசு பள்ளிகளில் உலக நாடுகளுக்கு இணையான கல்வி வழங்கப்படுவதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோா் கூறி வருகின்றனா். ஆனால், மாணவா்கள் தோ்வுகளில் ஏமாற்றி தோ்ச்சியடைவதை அவா்கள் ஊக்குவிக்கிறாா்கள். இதை எவ்வாறு புரிந்து கொள்வது? தில்லியின் கல்வி தொடா்பாக விளம்பரங்களில் காட்டும் அக்கறையை தில்லி அரசு கல்வித்துறையை மேம்படுத்துவதில் காட்டவில்லை என்றாா் அவா்.

இது தொடா்பாக குல்ஜீத் சிங் சாகல் கூறுகையில் ‘தில்லி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டது. தில்லி அரசு பள்ளி மாணவா்களின் 10, பிளஸ் 2 தோ்வுகளில் பின்னடைவை கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வருகிறாா்கள். இதற்கு தாா்மீகப் பொறுப்பேற்று மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments