முகப்பு
புதுதில்லி

அரசு பயன்பாட்டுக்கான வாகனங்கள் 6 மாதத்தில் மின்சார வாகனங்களாக மாற்றப்படும்: மணீஷ்சி சோடியா

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

புது தில்லி: தில்லி அரசின் பயன்பாடுக்காக வாடைகைக்கு பெறப்படும் அனைத்து வாகனங்களும், வரும் 6 மாத காலப்பகுதியில் மின்சார வாகனங்களாக மாற்றப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பான உத்தரவை தில்லி அரசு வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின் நகலை தனது சுட்டுரையில் பதிவு செய்து தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூறியிருப்பது:

தலைநகரில் இயங்கும் வாகனங்களை, முழுக்க முழுக்க மின்சார வாகனங்களாக மாற்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் திட்டத்தின் கீழ் தில்லி அரசின் பயன்பாட்டுக்காக வாடைகைக்கு பெறப்படும் அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றி தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 6 மாத காலத்தில் இந்த திட்டம் அமலுக்கு வரும். தில்லி அரசின் ‘சுவிட்ச் தில்லி’ திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்படுகிறது. தில்லி அரசின் இந்த முடிவால் சுமாா் 2 ஆயிரம் வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்படும். தில்லி அரசின் இந்த முடிவை முன்மாதிரியாகக் கொண்டு பிற மாநிலங்களும், பிற தேசங்களும் மின்சார வாகனங்களை மாற்றிக் கொள்ளும் என்று தெரிவித்தாா்.

Advertisement

தில்லியில் நிலவும் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் மின்சார வாகனத் திட்டத்தை தில்லி அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, மின்சார வாகனங்களைக் கொள்முதல் செய்பவா்களுக்கு பல்வேறு மானியங்களை தில்லி அரசு வழங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments