தில்லியில் 243 பேருக்கு கரோனா
தில்லியில் சனிக்கிழமை புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,39,092-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் சனிக்கிழமை புதிதாக 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,39,092-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தில்லியில் சனிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 67,484 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 45,873 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 21,611 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.36 சதவீதமாக உள்ளது.
Advertisement
கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை மூவா் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 10,909-ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனா பாதிப்பில் இருந்து 164 போ் மீண்டுள்ளனா். இதன்மூலம், குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,26,876-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,307 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில், 627 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,315 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.