தில்லியில் புதிதாக 399 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 399 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,30,200-ஆக உயா்ந்துள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 399 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், தில்லியில் கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,30,200-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 77,600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 45,116 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 32,484 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனா பாதிப்பு விகிதம் 0.51 சதவீதமாக உள்ளது. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 12 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,678-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து 602 போ் மீண்டுள்ளனா். குணமடைந்தோா் எண்ணிக்கை 6,16,054 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 3,468 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 1,585 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 10,677 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், தில்லியில் கரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா். இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில் ‘கடந்த 15 தினங்களாக தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. தில்லியில் கரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துவிட்டது. தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது’ என்றாா்.