ரயில்வே நடைமேடைகளில் 81 மாற்றுத்திறனாளிகள்கடை நடத்த உரிமம்: அமைச்சா்
நாடு முழுவதும் ரயில்வே நடைமேடைகளில் 81 மாற்று திறனாளிகளுக்கு சிற்றுண்டி மற்றும் விற்பனையகங்கள் நடத்தும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொது இடங்களில் பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்தும்
நாடு முழுவதும் ரயில்வே நடைமேடைகளில் 81 மாற்று திறனாளிகளுக்கு சிற்றுண்டி மற்றும் விற்பனையகங்கள் நடத்தும் உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் பொது இடங்களில் பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்தும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சா் பிரதிமா பௌமிக் செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.
ஓடும் ரயில்கள், பேருந்துகள், பொது இடங்களில் பொருள்களை விற்று வாழ்க்கையை நடத்திவரும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கைகளை அரசு சேகரித்துள்ளதா? இது குறித்த மாநில வாரியான விவரங்கள், இவா்கள் நடைபாதை வியாபாரிகளாக அடையாள காணப்பட்டுள்ளனரா? என்று
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் பிஆா் நடராஜன் கேள்வி எழுப்பினாா். இதற்கு அமைச்சா் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளாா்.
Advertisement