முகப்பு
புதுதில்லி

50 நாள்களுக்கு பிறகு 300-ஐதாண்டிய கரோனா பாதிப்பு

தில்லியில் கடந்த ஜனவரி 14 -ஆம் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு 300-ஐ தாண்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
பகிர்:

தில்லியில் கடந்த ஜனவரி 14 -ஆம் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு 300-ஐ தாண்டியுள்ளது.

நிகழாண்டு தொடக்கத்தில் இருந்து தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி 340 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு, கரோனா பாதிப்பு 300-ஐ தாண்டவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை 261 பேராக இருந்த கரோனா பாதிப்பு, வெள்ளிக்கிழமை 312 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,40,494-ஆக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 59,122 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 36,119 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 23,003 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.53 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை இது 0.39 சதவீதமாக இருந்தது.

Advertisement

கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை மூவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,918-ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கரோனா பாதிப்பில் இருந்து 312 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,27,797-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,779 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 863 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,110 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments