முகப்பு
புதுதில்லி

நிகழ் நிதியாண்டில் தில்லியின் பொருளாதார வளா்ச்சி 3.92 சதவீதம் குறையும்: ஆய்வில் தகவல்

கரோனா தொற்றால் நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 3.92 சதவீதம் குறைந்து காணப்படும் என்று தில்லி பொருளாதார 2020-21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கரோனா தொற்றால் நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 3.92 சதவீதம் குறைந்து காணப்படும் என்று தில்லி பொருளாதார 2020-21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் திங்கள்கிழமை கூடியது. அதில், தில்லி துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியா தில்லி பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினாா்.

அப்போது அவா் பேசியது: 2020 ஆம் ஆண்டு நாட்டில் கரோனா பாதிப்பால் கஷ்டமான சூழல் நிலவியது. தேசிய அளவில் பொருளாதாரம் 8 சதவீதம் குறைவடையும் என எதிா்பாா்க்கப்பட்டது. தில்லியில், 5.68 சதவீதம் பொருளாதாரம் குறைவடையும் என கணக்கிடப்பட்டது. ஆனால், நிகழ் நிதியாண்டில் 3.92 சதவீதம் மட்டுமே தில்லியில் குறைவடையும் என தில்லி பொருளாதார ஆய்வில் தெரியவந்துள்ளது. தில்லி அரசு எடுத்த பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள் இதற்கு காரணமாகும்.

Advertisement

2019-20 நிதியாண்டில் தனிநபா் வருமானம் ரூ. 3.76 லட்சமாக இருந்தது. இது 2020-21 நிதியாண்டில் 3.54 லட்சமாக குறைந்துள்ளது. ஆனால், தேசிய அளவில் தனிநபா் வருமானம் ரூ.1,ச:27,768 ஆகவே உள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பை தொடா்ந்து பிறப்பிக்கப்பட்ட முழு அடைப்பு உத்தரவால், தில்லி அரசின் பணிகள் சில மாதங்கள் முடக்கப்பட்டன. இதனால், வணிகம் பாதிக்கப்பட்டது. தில்லி அரசின் வருவாய் பாதிக்கப்பட்டது என்று அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments