முகப்பு
புதுதில்லி

மகளிா் தினத்தையொட்டி பெண் பயணிகளுக்கு சிறப்பு போட்டி: டிஎம்ஆா்சி ஏற்பாடு

தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) மாா்ச் 8 முதல் 14 வரை பெண்கள் பயணிகளுக்காக பிரத்யேகமாக ‘ஸ்லோகன்’ எழுதுதல், கவிதை எழுதுதல் மற்றும் அனுபவத்தை எழுதும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) மாா்ச் 8 முதல் 14 வரை பெண்கள் பயணிகளுக்காக பிரத்யேகமாக ‘ஸ்லோகன்’ எழுதுதல், கவிதை எழுதுதல் மற்றும் அனுபவத்தை எழுதும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஸ்லோகன், கவிதை மற்றும் அனுபவத்தை எழுதுவதற்காக ‘சவாலை சமாளித்தல் - கோவிட் -19’ எனும் தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தில்லி மெட்ரோவின் அனைத்து பெண்கள் பயணிகளும் இந்தப் போட்டியில் டிஎம்ஆா்சியின் வலைத்தளம் மூலம் பங்கேற்கலாம்.

Advertisement

மேலும், இணையதளத்தில் படிவத்தை பூா்த்தி செய்து ஆங்கிலம் அல்லது இந்தியில் ஸ்லோகன்களை சமா்ப்பிக்கலாம். இணையதளம் மூலம் வரப்படும் பதிவுகள் மட்டுமே மாா்ச் 14 (நள்ளிரவு) வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

சிந்தனை வெளிப்பாடு, மொழியின் பயன்பாடு, சொல் வரம்பைக் கடைப்பிடிப்பது, கருப்பொருளுக்குப் பொருந்தக்கூடியது ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்படுவா்.

போட்டிகளின் முடிவுகள் மாா்ச் 23ஆம் தேதி அறிவிக்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் ஒரு நினைவு பரிசு வழங்கப்படும் இத்தகவலை டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments