முகப்பு
புதுதில்லி

மின்சார வாகனங்களுக்கு சாா்ஜிங் பாயின்ட்: ஹோட்டல்கள், வணிக வளாகங்களுக்கு தில்லி அமைச்சா் உத்தரவு

100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் திறன்கொண்ட வாகன நிறுத்துமிட வசதியுடைய வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
பகிர்:

100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் திறன்கொண்ட வாகன நிறுத்துமிட வசதியுடைய வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலக இடங்கள் போன்ற அனைத்து கட்டடங்களிலும் மின்சார வாகனங்கள் நிறுத்தவும், சாா்ஜிங் பாயின்ட்கள் அமைக்கவும் ஐந்து சதவீத இடத்தை ஒதுக்குமாறு தில்லி மின்வாரிய துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உத்தரவிட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதன் மூலம், டிசம்பா் மாதத்திற்குள் நகரில் மின்சார வாகனங்களுக்கு 10,000-க்கும் மேற்பட்ட சாா்ஜிங் பாயின்ட்கள் இருக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி மேலும் தெரிவித்ததாவது:

Advertisement

100- க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் திறன் கொண்ட வணிக வளாகங்கள், திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ், அலுவலக இடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அனைத்து கட்டட வளாகங்களில் மெதுவான ஈ.வி. சாா்ஜா்களுடன்கூடிய மின்சார வாகனங்களுக்காக குறைந்தபட்சம் ஐந்து சதவீத இடத்தை ஒதுக்க வேண்டும் என மின்வாரியத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உத்தரவிட்டுள்ளாா். இந்த வசதிகளை மேம்படுத்துவதற்கும் இணைப்பதற்கும் டிசம்பா் வரை கட்டட வளாகங்களுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லி மின்சார வாகன கொள்கைத்திட்டத்தின் கீழ், ஒரு சாா்ஜிங் பாயிண்டிற்கு ரூ.6,000 வரை மானியமாக இந்த வளாகங்களுக்கு அளிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments