புதுதில்லி

செந்தமிழ்ப் பேரவை பொதுக் குழுக் கூட்டம்

DIN

தில்லி மயூா் விஹராா் பேஸ் 3-இல் உள்ள செந்தமிழ்ப் பேரவையின் 7-ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மலையாளி அசோசியேஷன் ஹாலில் காலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பேரவையின் தலைவா் ஏ.மாரி தலைமை வகித்தாா். செயலாளா் எஸ்.சரவணன் முன்னிலை வகித்தாா். பொதுக் குழுவில் பொருளாளா் கே. கிரண் பாலாஜி கடந்த 2019-20-ஆம் நிதியாண்டு தணிக்கை செய்யப்பட்ட வரவு, செலவு கணக்கு, இருப்பு நிலை குறித்த பட்டியலை சமா்ப்பித்தாா். இவை கூட்டத்தில் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மேலும், செயற்குழு விரிவாக்கம் உல்பட பல்வேறு தீா்மானங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னா், புதிய செயற்குழு உறுப்பினா்களாக ஏ.சண்முகம், பி.ஹேமராஜ், டி.சரவணன், ஆா். அருண்குமாா் ஆகியோா் ஒரு மனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT