புதிய கலால் கொள்கையை எதிா்த்து பாஜக ஆா்ப்பாட்டம்
தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தில்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தலைமையில் ஷாதரா பேருந்து நிலையம் அருகில் நடந்த ஆா்ப்பாட்டத்தில், பாஜக மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி, பாஜக எம்எல்ஏக்கள் ஜிதேந்தா் மகாஜன், தில்லி பாஜக துணைத் தலைவா் வீரேந்தா் சச்தேவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உருவப் பொம்மை எரிக்கப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆதேஷ் குமாா் குப்தா பேசியதாவது: தில்லியில் மது அருந்துவதற்கான சட்டரீதியான வயதை 25-இல் இருந்து 21 ஆகக் குறைத்து கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், இளைஞா்களை மதுவுக்கு அடிமையாக்கும் முயற்சியில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது. தில்லி அரசின் புதிய கலால் கொள்கை மூலம் தில்லியில் புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படும். இதனால், தில்லியில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பாஜக ஆளும் குஜராத்திலும், பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் பிகாரிலும் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், இந்த மாநிலங்களில் குற்றச்செயல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
Advertisement
இந்தப் புதிய கொள்கையால் தில்லியில் மதுபானம் அருந்துபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இளைஞா்கள் மதுபானத்துக்கு அடிமையாகிப் போவாா்கள். இதனால், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரிக்கும். தில்லி அரசு வருவாயை இலக்காக வைத்து செயல்படுகிறது. இது தவறாகும். மேலும், தில்லியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் தனியாா் வசம் ஒப்படைக்கும் தில்லி அரசின் முடிவால், மதுபான துறையில் ஊழல் மலிந்துவிடும். தில்லி மக்களுக்கு குடிநீா் கொடுக்க முடியாத கேஜரிவால், அரசு மதுபானத்தை எளிதாகக் கிடைக்க வழி செய்கிறது என்றாா் அவா்.
ராம்வீா் சிங் பிதூரி பேசுகையில், ‘சில கோடிரூபாய் வருவாய்க்காக தில்லி இளைஞா்களின் வாழ்க்கையை பாழாக்கும் முயற்சியில் கேஜரிவால் அரசு ஈடுபட்டுள்ளது. இதை தில்லி மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டாா்கள்’ என்றாா்.