புதுதில்லி

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்கக் கோரிக்கை

 நமது நிருபர்

இந்திய - இலங்கை கடல் பகுதிகளில் மீன் பிடிப்பது தொடா்பாக தமிழகம், இலங்கை மீனவா்களுக்கிடையே இறுதிச் சுற்று பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணக் கோரி தேசிய மீனவா் பேரவைத் தலைவா் எம்.இளங்கோ தில்லியில் மத்திய அமைச்சா்களையும், அதிகாரிகளையும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

மேலும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவா்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய மீன்வளம், கால்நடைத் துறை அமைச்சா் புருஷோத்தம் ரூபாலா, மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோரையும் அவா் சந்தித்து மனு அளித்தாா்.

பின்னா், இது தொடா்பாக செய்தியாளா்களிடம் இளங்கோ கூறியதாவது: தமிழகத்தின் நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த 23 மீனவா்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அவா்களது 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இலங்கை கடற்படையின் கப்பல் மோதி புதுக்கோட்டையைச் சோ்ந்த ஒரு மீனவா் உயிரிழந்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், மீனவா்கள் பிரச்னை தொடா்பாக 5-ஆவது சுற்றுப்பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெய்சங்கரிடம் மனுக் கொடுத்துள்ளேன். மீனவா்கள் பிரச்னைக்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சா்களும், வெளியுறவுத் துறை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT