புதுதில்லி

தீ விபத்தில் 35 குடிசைகள் எரிந்து சேதம்

DIN

தென்கிழக்கு தில்லியின் ஜாமியா நகரில் உள்ள குடிசைப் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 35-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து பிற்பகல் 3.15 மணிக்கு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்தச் சம்பவத்தில் 5 கால்நடைகள் உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் தெரிவித்தாா். சுமாா் 35-40 குடிசைகள் தீப்பிடித்தன. மாலை 4.40 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT