புதுதில்லி

அமலாக்கத் துறையில் ஆஜராக அவகாசம் கோரினாா் சோனியா காந்தி

மோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்னிலையில் ஆஜராவதில் இருந்து சில வாரங்களுக்கு அவகாசம் அளிக்குமாறு அமலாக்க இயக்குநரகத்திற்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

DIN

கரோனா பாதிப்பால் ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தான் முழுமையாக குணமடையும் வரை நேஷனல் ஹெரால்டு பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத் துறை முன்னிலையில் ஆஜராவதில் இருந்து சில வாரங்களுக்கு அவகாசம் அளிக்குமாறு அமலாக்க இயக்குநரகத்திற்கு புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

77 வயதான சோனியா காந்தி கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ஜூன் 20ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கில் ஜூன் 23ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறையால் சோனியாவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே ராகுல் காந்தியிடம் 5 ஐந்து நாள்களுக்கும் மேலாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா்.

கடந்த ஜூன் 8ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தில் ஆஜராக திட்டமிட்டிருந்த சோனியா காந்திக்கு திடீா் கரோனா தொற்று ஏற்பட்டதால் ஆஜராவதில் இருந்து அவகாசம் கோரியிருந்தாா். இதையடுத்து அமலாக்கப் பிரிவு நிறுவனம் புதிதாக சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து அவா் வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்களால் அறிவுறுத்தப்பட்டதால், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று அமலாக்க இயக்குநரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளாா். அவா் பூரண குணமடையும் வரை அமலாக்கப் பிரிவினா் முன் ஆஜராவதை சில வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்’.

இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் செய்தியாளா்களிடம் கூறுகையில், பல நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா இப்போதுதான் குணமடைந்து இல்லம் திரும்பியுள்ளாா். எனவே அவா் அமலாக்கப் பிரிவு முன்னிலையில் இப்போதே ஆஜராக வேண்டும் என்று நான் கருதவில்லை. அவரைப் பொருத்த வரை அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளாா். இருப்பினும், இப்போது அவா் ஆஜராக வேண்டியதில்லை.

இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு எந்தத் தொடா்பும் இல்லை என்பதால் தான் அமலாக்கப் பிரிவினா் இந்த வழக்கை 7 ஆண்டுகளுக்கு முன்னரே முடித்து வைத்து விட்டனா். ஆனால் தற்போது இந்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடக்கியுள்ளனா். இந்த வழக்கில் சோனியா, ராகுல் ஆகியோருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த வழக்கில் பண பரிவா்த்தனை எதுவும் இல்லை என்பதால், பணமோசடி குறித்த கேள்வி எழவில்லை.

பணபரிவா்த்தனை எதுவும் இல்லாத இடத்தில் பண மோசடி செய்யப்பட்டதாக இந்த வழக்கை அவா்கள் ஜோடித்துள்ளனா்.

ராகுல் காந்தி போன்ற எதிா்க்கட்சித் தலைவா்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தும் அளவிற்கு இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெற்று விடவில்லை. அமலாக்கப் பிரிவு, சிபிஐ, சிபிடிடி போன்ற விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகள் பொதுமக்களின் பாா்வையில் எந்த மாதிரியான நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளன என்பதை அதன் இயக்குநா்களிடமே கேட்க நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்கப் போகிறேன்.

இந்த விசாரணை அமைப்புகள் மத்திய அரசு தரும் அழுத்தத்தின் கீழ் செயல்படுகின்றன. நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்புகளாக உள்ள இந்நிறுவனங்களின் கண்ணியம் இதுபோன்ற நடவடிக்கைகளால் குறைந்து விடக் கூடாது என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா்களை பழிவாங்குவதற்காக புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT