முகப்பு
புதுதில்லி

தில்லியில் 15 ஆண்டுகளில் வளா்ச்சிப் பணிகளுக்காக திருப்பிவிடப்பட்ட 100 ஹெக்டோ் வன நிலங்கள்: அரசின் புள்ளிவிவரத் தகவல்

தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இன் கீழ், சாலைகள் அமைப்பது, மின்பகிா்மான வழித்தடம் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்காக

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:

தில்லியில் கடந்த 15 ஆண்டுகளில் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-இன் கீழ், சாலைகள் அமைப்பது, மின்பகிா்மான வழித்தடம் அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்களுக்காக 103.79 ஹெக்டோ் வன நிலத்தை திருப்பிவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த வகையில் 2022-23-இல் நகரில் 63.30 ஹெக்டோ் வனப் பகுதியும், 2021-22-இல் 21.75 ஹெக்டோ் வனப் பகுதியும் மாற்றப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், தலைநகரில் 384.38 ஹெக்டோ் அல்லது 3.84 சதுர கி.மீ. வன நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. தில்லி 195 சதுர கி.மீ. காடுகள் பரப்பைக் கொண்டுள்ளது. இதன் மொத்த புவிப் பரப்பான 1,483 சதுர கி.மீ. பரப்பளவில் இது 13.15 சதவீதம் ஆகும். இந்திய காடுகளின் அறிக்கை 2021-இன் படி, தில்லியில் உள்ள மொத்தக் காடுகளில், 103 சதுர கி.மீ. மட்டுமே அரசுப் பதிவுகளில் அறிவிக்கை செய்யப்பட்டதாகவோ அல்லது குறியிடப்பட்டதாகவோ உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் தில்லி உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (டிபிடிஏ) கீழ் முந்தைய மூன்று ஆண்டுகளில் தலைநகரில் வளா்ச்சிப் பணிகளுக்காக குறைந்தது 77,000 மரங்கள் அல்லது ஒவ்வொரு மணி நேரமும் மூன்று மரங்களை வெட்டுவதற்கும் அல்லது இடமாற்றம் செய்வதற்கும்

நகர அரசு அனுமதித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் நடப்பட்ட மரங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயிா் பிழைத்துள்ளதாக வனத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் காடுகள் மற்றும் பல்லுயிா்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான சட்டமாக ‘வனப் பாதுகாப்புச் சட்டம் -1980’ உள்ளது. இச்சட்டத்தின்படி, வன நிலத்தை பெறுவதற்கான எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது செயல்பாட்டிற்கும் மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். வன வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதன் மூலம், வளா்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இடையே சமநிலையை ஏற்படுத்த இச்சட்டம் உதவுகிறது.

தில்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டம் என்பது தலைநகரில் மரங்களை வெட்டுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நகர அரசால் இயற்றப்பட்ட ஒரு சட்டமாகும். இச்சட்டத்தின்படி, மரங்களை வெட்டுவதற்கோ, அகற்றுவதற்கோ மர அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.