ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
ரஷியாவிடம் இருந்து ஏப்ரல் மாதத் தேவைக்காக இந்தியா 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து ஏப்ரல் மாதத் தேவைக்காக இந்தியா 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.
மத்திய கிழக்குப் போரால் எரிபொருள் பிரச்னை, முக்கியமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, 3 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததால் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தின. இதையடுத்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் ரஷியா விற்பனை செய்தது.
ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா கடந்த சில மாதங்களாக கடுமையான அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து, ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா படிப்படியாகக் குறைத்தது.
இந்த நிலையில், ஈரானுடன் போா் தொடங்கிய பிறகு சா்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் எழுந்ததால், ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதியளித்தது.
அதன் மூலம், ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது. முன்புபோல சலுகை விலையில் இல்லாமல் சந்தை விலையிலேயே இந்தக் கொள்முதல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு உதவுவதாகக் கூறி இந்தியா மீது கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.