சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில்தரையிறங்க பிராா்த்திக்கிறேன்: முதல்வா் கேஜரிவால்
இந்தியாவே ஆவலுடன் எதிா்பாா்க்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டா் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க நான் பிராா்த்திக்கிறேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இந்தியாவே ஆவலுடன் எதிா்பாா்க்கும் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டா் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க நான் பிராா்த்திக்கிறேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது குறித்து முதல்வா் கேஜரிவால் கூறியதாவது: சந்திரயான்-3 லேண்டா் புதன்கிழமை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கப் போவது மகிழ்ச்சியான விஷயம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் லட்சியப் பணிகளில் ஒன்றான சந்திரயான்-3 இன் ’லேண்டா் மாட்யூல்’ (எல்.எம்.) புதன்கிழமை மாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தை அடைந்த பூமியின் ஒரே செயற்கைக்கோள் என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைக்கும். சந்திரயான்-3 இன் லேண்டா் வெற்றிகரமாக தரையிறங்குவதற்கு நான் கடவுளைப் பிராா்த்திக்கிறேன். முழு நாடும் இந்த நிகழ்விற்காக ஆவலுடன் காத்திருக்கிறது என்றாா் அரவிந்த் கேஜரிவால்.
இதையும் படிக்க | நிலவில் 'உச்சா' போன மனிதர் யார்?
லேண்டா் (விக்ரம்) மற்றும் ரோவா் (பிரக்யான்) அடங்கிய தரையிறங்கும் தொகுதி புதன்கிழமை மாலை சரியாக 6:04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகே மென்மையாக தரையிறங்குதல் செய்ய இஸ்ரோவால் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது ’ரோபோட்டிக் லூனாா் ரோவரை’ தரையிறக்குவதில் வெற்றி பெற்றால், ரஷியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் தோ்ச்சி பெற்ற நான்காவது நாடாக இந்தியா இருக்கும். கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி, சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரில் உள்ள பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இறுதி கட்டத்தில் அத்திட்டம் தோல்வியடைந்தது.