குறுவை பருவத்தில் 5 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் இலக்கு: தமிழகத்தில்15 லட்சம் மெட்ரிக் டன்னுக்கு வாய்ப்பு
எதிர்வரும் குறுவை சந்தைப் பருவத்தில் 5.21 கோடி மெட்ரிக் டன் நெல் நாடு முழுவதும் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர், உணவு, பொது விநியோக..
2023-24-ஆம் ஆண்டில் எதிர்வரும் குறுவை சந்தைப் பருவத்தில் 5.21 கோடி மெட்ரிக் டன் நெல் நாடு முழுவதும் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 15 லட்சம் மெ.டன் நெல் கொள் முதல் செய்ய வாய்ப்புள்ளது.
நிகழ் 2023-24-ஆம் ஆண்டு குறுவை சந்தைப் பருவத்துக்கான (காரீஃப் பருவம்) கொள்முதல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க மத்திய அரசின் உணவுப் பொது விநியோகத் துறையின் செயலர் சஞ்சீவ் சோப்ரா தலைமையில் மாநில உணவுத் துறை செயலர்கள் பங்யோகற்ற கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபற்றது.
இதில் 22 மாநில அரசு செயலர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் பங்யோகற்றனர். தமிழக அரசின் கூட்டுறவு, உணவு, நுகர்யோவார் பாதுகாப்புத் துறை செயலர் டி.ஜகந்நாதன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியது வருமாறு:
எதிர்வரும் குறுவை சந்தைப் பருவம் 2023-24 காலக்கட்டத்தில் 5.21 கோடி மெட்ரிக் டன் நெல்லை நாடு முழுவதும் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 5.18 கோடி மெட்ரிக் டன் கொள்முதலுக்கு மதிப்பீடு செய்யப்பட்டாலும், 496 லட்சம் மெட்ரிக் டன்தான் 2022-23 ஆண்டில் கொள்முதல்
செய்யப்பட்டது.
நிகழ் குறுவை சந்தை பருவத்தில் 7 முன்னணி மாநிலங்களில் அதிகமாக நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் (122 லட்சம் மெட்ரிக் டன்), சத்தீஸ்கர் (61 லட்சம் மெ.டன்), தெலுங்கானா(50 லட்சம் மெ.டன்), ஒடிஸா (44.28 லட்சம் மெ.டன்), உத்தர பிரதேசம்(44 லட்சம் மெ.டன்), ஹரியாணா(40 லட்சம் மெ.டன்) மற்றும் மத்திய பிரதேசம் (34 லட்சம் மெ.டன்) என்ற அளவில் நெல் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பிகார், ஆந்திரம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 30 லட்சம் மெ.டன்னுக்கு குறைவாகத்தான் கொள்முதல் இருக்கும். தமிழகத்தில் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவில் நெல் கொள்முதலுக்கு வாய்ப்புள்ளது.
மூன்று மடங்கு "ஸ்ரீஅன்னா”:
ஸ்ரீஅன்னா சிறுதானியங்கள் வரிசையில் 2023-24 ஆம் ஆண்டு குறுவை சந்தைப் பருவத்தில் 33.09 லட்சம் மெட்ரிக் டன் சிறுதானியங்கள் மாநிலங்களால் கொள்முதல் செய்யவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 7.37 லட்சம் மெட்ரிக் டன் அளவில் குறுவை மற்றும் ராஃபி பருவ சந்தைகளில் கொள்முதல் செய்யப்பட்டது.
6 சிறுதானியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை கேழ்வரகின் குûறந்தபட்ச ஆதரவு விலையில் (2023-24 நிதியாண்டு முதல்) மூன்று ஆண்டுகள் வரை மாநிலங்கள் கொள்முதல் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சிறுதானியங்களின் கொள்முதல் மற்றும் நுகர்வை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு சிறுதானியங்களின் விநிúயாக காலத்தை மாற்றியமைத்து, சிறுதானியங்களை மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்வதையும் ஒருங்கிணைத்துள்ளது.
மேலும் மானியம், நிர்வாகக் கட்டணம் (2 சதவீதம்) ஆகியவை ஆறு சிறுதானியங்கள் கொள்முதல் செய்வதற்கு வழங்கப்பட்டு வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச சிறுதானிய ஆண்டுக்காக (2023) மட்டுமின்றி இந்தப் பயிர்களை பன்முகப்படுத்துவதற்கும் உணவு முறைகளில் மேம்பட்ட ஊட்டச்சத்துகளை பெற சிறுதானியங்களை தொடர்ந்து கொள்முதல் செய்வதில் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என மத்திய உணவு, நுகர்வோர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.