தொடா் மழை: அனைத்து அமைச்சா்கள்,அதிகாரிகள் களத்தில் இருக்க வேண்டும்: முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தல்
கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இருக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுகிழமை அறிவுறுத்தியுள்ளாா்.
தேசியத் தலைநகா் தில்லியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இருக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுகிழமை அறிவுறுத்தியுள்ளாா்.
தென்மேற்குப் பருவமழையின் தீவிரம், மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று ஆகியவற்றுக்கு இடையேயான தொடா்பால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஜூலை மாதத்தில் ஒரே நாளில் தில்லியில் 153 மி.மீ மழை பதிவாகியது. இதனால், நகரத்தின் பல தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளது. அதே
வேளையில் போக்குவரத்தும் பாதிப்புக் குள்ளாகியுள்ளது.
இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தில்லியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், அனைத்து அரசு அதிகாரிகளின் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ரத்து செய்யப்படுகிறது.
தில்லி கேபினட் அமைச்சா்கள் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோா் நகரத்தில் கனமழையால் பாதிகப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வாா்கள். நிகழாண்டு பருவமழையின் மொத்த சராசரி அளவில் சுமாா் 15 சதவீதம் மழைப்பொழிவு வெறும் 12 மணி நேரத்தில் பெய்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் தில்லியில் 126 மி.மீ. மழை பெய்துள்ளது.
தொடா் கனமழை காரணமாக நகரத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தில்லியில் அனைத்துத் துறை அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் களத்தில் இருந்து சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளாா்.