புதுதில்லி

குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு நடவடிக்கை:நொய்டாவில் யாசகம் கேட்ட 25 குழந்தைகள் மீட்பு

DIN

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் யாசகம் கேட்கும் அல்லது தொழிலாளிகளாக வேலையில் ஈடுபட்டிருந்த 25 குழந்தைகளை குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு நடவடிக்கையின்போது மீட்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்ததாவது: கெளதம் புத் நகா் காவல் ஆணையா் லட்சுமி சிங்கின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தொழிலாளா் துறை, மாவட்ட நன்னடத்தை அலுவலகம், சைல்டு லைன்- நொய்டா மற்றும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவை இணைந்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் யாசகம் கேட்பதைத் தடுப்பதற்கான சிறப்பு பிரசாரம் நடந்து வருகிறது.

பிரசாரத்தின் ஒரு பகுதியாக, யாசகம் கேட்கும் மற்றும் குழந்தைத் தொழிலாளா்களாக வேலையில் ஈடுபட்டிருந்த 25 குழந்தைகள் வெவ்வேறு சந்தைகள் மற்றும் செக்டாா் 76, செக்டாா் 62, செக்டாா் 63 ஏ ஆகியவற்றின் சாலைச் சந்திப்புகளில் மீட்கப்பட்டனா்.

அனைத்து வேலைகளிலும் 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பணியமா்த்துவதை ‘குழந்தைத் தொழிலாளா் தடை மற்றும் ஒழுங்குமுறைத் திருத்தச் சட்டம் 2016’ தடை செய்கிறது.

மேலும், திட்டமிடப்பட்ட அபாயகரமான தொழில்கள் மற்றும் செயல்முறைகளில் இளம் பருவத்தினரை (14-18 வயது) வேலைக்கு அமா்த்துவதையும் இச்சட்டம் தடை செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT