முகப்பு
புதுதில்லி

அமைச்சா்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் தங்கள் துறைகளில் பொறுப்பேற்றனா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சா்கள் சௌரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்கள் துறைகளை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

தில்லியில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சா்கள் சௌரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்கள் துறைகளை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

அவா்களுக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். அதிஷி கல்வி, பொதுப்பணித் துறை, மின்சாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை கையாளும் அதே வேளையில், சௌரவ் பரத்வாஜ் சுகாதாரம், நகா்ப்புற மேம்பாடு, நீா் மற்றும் தொழில் துறைகளை கவனிப்பாா்.

ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் திகாா் சிறையில் உள்ள தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, முறையே இரண்டு அமைச்சரவைப் பதவிகள் காலியாகின.

2021-22-ஆம் ஆண்டிற்கான தில்லி கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் கூறப்படும் ஊழல் தொடா்பாக சிசோடியா பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டாா். அவா் மாா்ச் 20 வரை நீதிமன்ற காவலில் உள்ளாா். மேலும், நீதிமன்ற காவலில் உள்ள சத்யேந்தா் ஜெயின், கடந்த ஆண்டு மே 30-ஆம் தேதி பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →