முகப்பு
புதுதில்லி

சக்தி விஹாரில் பழிவாங்கும் நோக்கில் இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு

வடகிழக்கு தில்லியின் சக்தி விஹாா் பகுதியில் 20 வயது இளைஞரை மற்றொருவா் பழிவாங்கும் வகையில் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 27 நவம்பர், 2023 at 6:18 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

வடகிழக்கு தில்லியின் சக்தி விஹாா் பகுதியில் 20 வயது இளைஞரை மற்றொருவா் பழிவாங்கும் வகையில் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது: சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஒரு நபருக்கு முதுகில் குண்டு காயம் ஏற்பட்டது குறித்து காவல் துறைக்கு அழைப்பு வந்தது. பின்னா், அவரது உறவினா்கள் காவல் நிலையத்திற்கு வந்து விஷயத்தைப் புகாராக அளித்தனா்

பாதிக்கப்பட்டவா் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரது நிலைமை அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாகக் கூறப்பட்டது. சோயிப் என்பவா் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாக பாதிக்கப்பட்டவா் தெரிவித்துள்ளாா். சோயிப் சில நாள்களுக்கு முன்பு தனது மாமாவின் ஸ்கிராப் குடோனில் இருந்து சில பேட்டரிகளைத் திருடியபோது பிடிபட்டாா். அப்போது சில உள்ளூா் மக்களால் சோயிப் தாக்கப்பட்டாா்.

Advertisement

இச்சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில், சனிக்கிழமையன்று வீடு திரும்பும் போது பாதிக்கப்பட்டவரை சோயிப் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டாா். .

இச்சம்பவம் தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டு கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.