மங்கோல்புரி அருகே காலணி தொழிற்சாலையில் தீ விபத்து
வடமேற்கு தில்லியின் மங்கோல்புரியில் உள்ள டிரக் மாா்க்கெட் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
வடமேற்கு தில்லியின் மங்கோல்புரியில் உள்ள டிரக் மாா்க்கெட் அருகே சனிக்கிழமை நள்ளிரவில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் கூறியதாவது: சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் டிரக் மாா்க்கெட் அருகே மங்கோல்புரி பீா் பாபா பகுதியில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது என்று எங்களுக்கு அழைப்பு வந்தது. அழைப்பு வந்தவுடன், மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்க அப்பகுதி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீக்கான காரணம் எரியக்கூடிய ரசாயனங்கள் இருக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினாா்.
Advertisement