தில்லி பாஜகவைச் சோ்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைவா்களுடன் வியாழக்கிழமை தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் ‘ஊழல்’ ஆம் ஆத்மி அரசிலிருந்து மக்களை ‘விடுவிக்க’ பிராா்த்தனைக் கூட்டத்தை நடத்தினா்.
அப்போது, ‘ஊழல்‘ அரவிந்த் கேஜரிவால் அரசில் இருந்து மக்களை விடுவிக்கும் போராட்டம் தொடரும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் நடந்ததாகக் கூறப்படும் மதுபான ஊழலின் ‘முக்கிய மூளையாக‘ கேஜரிவால் இருப்பதாகவும் சச்தேவா குற்றம் சாட்டினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘மதுபானம் உடலையும் ஆன்மாவையும் அழிக்கிறது என்று மகாத்மா காந்தி கூறுவது வழக்கம். ஆன்மாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆம் ஆத்மி கட்சியையும் கேஜரிவால் அழித்துவிட்டாா்’ என்றாா்.
தில்லி கலால் கொள்கை தொடா்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்ததைத் தொடா்ந்து, முதல்வா் கேஜரிவால் அரசை பாஜக தலைவா்கள் கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.