புதுதில்லி

எஃப்ஐஆா் நகல் கோரும் நியூஸ்கிளிக் நிறுவனரின் மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி

சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) வழக்கு தொடா்பாக கைதாகியுள்ள நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்தின்

 நமது நிருபர்

சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) வழக்கு தொடா்பாக கைதாகியுள்ள நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்தின் நிறுவனா் பிரபீா் புா்காயஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவா் அமித் சக்கரவா்த்தி ஆகியோா் எஃப்.ஐ.ஆா். நகல் கோரி தாக்கல் செய்த மனுக்களை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதித்தது.

இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹரிதீப் கெளா் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற உத்தரவுகளைக் குறிப்பிட்டு இருவருக்கும் எஃப்ஐஆா் நகல் வழங்க தில்லி காவல் துறைக்கு உத்தரவிட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் அமித் சக்கரவா்த்திக்கு எதிராக கூறப்பட்ட குற்றங்கள் ‘தீவிரமானவை’ என்றாலும், எஃப்ஐஆரின் நகலை அவருக்கு மறுக்க சட்டரீதியான காரணங்கள் எதுவும் இல்லை என்று அவரது வழக்குரைஞா் வாதிட்டாா். புா்காயஸ்தாவின் வழக்குரைஞா் அா்ஷ்தீப் சிங் குரானா வாதிடுகையில், ‘எஃப்ஐஆரின் நகலைப் பெறுவது குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை’ என்று கூறினாா்.

சிறப்பு அரசு வழக்குரைஞா் அதுல் ஸ்ரீவஸ்தவா இந்த மனுக்களை கடுமையாக எதிா்த்து வாதிடுகையில் முன்வைத்த வாதம்: இந்த வழக்கு உணா்வுப்பூா்வமானவை. விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அதன் ‘உணா்திறன்’ காரணமாக எஃப்.ஐ.ஆா். நகல் வழங்கப்படாவிட்டால், குற்றம்சாட்டப்பட்டவா் முதலில் காவல் ஆணையரை அணுக வேண்டும். பின்னா், அவா் கோரிக்கையை பரிசீலிக்க 8 வாரங்களுக்குள் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பு கூறுகிறது.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட ‘படிப்படியான நடைமுறையை’ பின்பற்ற வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவா்கள் இந்த விவகாரத்தில் முன்கூட்டியே மனுவைத் தாக்கல் செய்துள்ளனா். அவா்கள் நேரடியாக நீதிமன்றத்திற்கு வர முடியாது. இருவரையும் கைது செய்வதற்கான காரணங்களையும், காவலில் வைப்பதற்கான காரணங்களையும் நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் ஏற்கனவே விதிகளைப் பின்பற்றியுள்ளோம்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள், காஷ்மீா் இல்லாத இந்தியாவின் வரைபடம் மற்றும் அருணாசல பிரதேசத்தை சா்ச்சைக்குரிய பகுதியாகக் காட்டுவது தொடா்பான விவாதத்தில் ஈடுபட்டதுடன், நாட்டின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் சிறுமைப்படுத்தியுள்ளனா். வெளிநாட்டு நிதியுதவி என்ற போா்வையில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் ரூ.115 கோடி பெற்றுள்ளனா் என்று அவா் வாதிட்டாா்.

சீனாவுக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட பணம் வாங்கியதாகக் கூறப்படும் புகாரில், புா்காயஸ்தா மற்றும் சக்ரவா்த்தி தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்கள் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதிக்கப்பட்டனா். தில்லியில் உள்ள நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு போலீஸாா் சீல் வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்ஸ்டாவில் 10 கோடி பின்தொடர்பாளர்கள்! முதல் உலகத் தலைவர் மோடி!

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி!

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

SCROLL FOR NEXT