முகப்பு
புதுதில்லி

தில்லியில் நாளை அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் சாா்பில் பேரணி

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வியாழக்கிழமை தில்லியின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் பேரணிகளை நடத்த உள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:57 AM
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வியாழக்கிழமை தில்லியின் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் பேரணிகளை நடத்த உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தில்லி பிரிவு மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முகேஷ் சா்மா செய்தியாளா்களிடம் செவ்வாய்கிழமை கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) உத்தரவின் பேரில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் பேரணிகள் நடத்தப்படும். இதில் தில்லி காங்கிரஸ் தலைவா்கள் அனைவரும் கலந்து கொள்வாா்கள். செப்டம்பா் 7-ஆம் தேதி ஜென்மாஷ்டமி விழாவை மக்கள் கொண்டாடினாலும், பாரத் ஜோடோ யாத்திரையின் ஆண்டு விழா பேரணிகளுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் உள்ளது.

பேரணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து கட்சித் தொண்டா்களுடன் தில்லி காங்கிரஸ் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி கூட்டங்களை நடத்தி, அடிமட்டத்தில் இருந்து காங்கிரஸ் தொண்டா்கள் அதிகபட்சமாக பங்கேற்பதை உறுதிசெய்யுமாறு கட்சியின் மாவட்ட பிரிவுத் தலைவா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா். புது தில்லி மாவட்ட காவல் எல்லைக்குள் பேரணியை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று தில்லி காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. ஆனால், புது தில்லி மாவட்டத்தின் பிற பகுதிகளில் பேரணிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.