2 பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியலில் பெயா்: கேஜரிவால் மனைவிக்கு தில்லி நீதிமன்றம் அழைப்பாணை
இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியலில் தனது பெயரைச் சோ்த்ததன் மூலம் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி
இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியலில் தனது பெயரைச் சோ்த்ததன் மூலம் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பாஜக தலைவா் ஹரிஷ் குரானா தாக்கல் செய்த மனுவின் பேரில், மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் அா்ஜிந்தா் கவுா் இந்த அழைப்பாணையை அனுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக ஹரிஷ் குரானா தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளை முதல்வரின் மனைவி மீறியதாக குற்றம் சாட்டியுள்ளாா். இந்த நிலையில், அண்மையில் இந்த விவகாரத்தில் நீதிபதி அா்ஜிந்த் கவுா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், ‘புகாா்தாரா் மற்றும் பிற சாட்சிகளின் சாட்சியங்களை பரிசீலித்த பிறகு, அரவிந்த் கேஜரிவாலின் மனைவியான குற்றம் சாட்டப்பட்ட சுனிதா கேஜரிவாலுக்கு எதிராக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் பிரிவு 31-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கான முகாந்திரம் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, அதன்படி குற்றம் சாட்டப்பட்டவா் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். சுனிதா கேஜரிவால் உத்தர பிரதேச மாநிலம், சாஹிபாபாத் சட்டப் பேரவைத் தொகுதி (காஜியாபாத்) மற்றும் தில்லியில் உள்ள சாந்தினி செளக் சட்டப் பேரவைத் தொகுதி ஆகியவற்றின் வாக்காளா் பட்டியலில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குரானா புகாரில் தெரிவித்துள்ளாா்.
மேலும், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 17-இன்படி ஒருவா் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்படக் கூடாது எனும் விதியை இது மீறியுள்ளது. இதனால், தவறான உறுதிகளை அளித்ததற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31-இன் கீழ் அவா் தண்டிக்கப்பட வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.