புதுதில்லி

தில்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் காங்கிரஸுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி போட்டி: அமைச்சா் கோபால் ராய் பேட்டி

வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்ரஸுடன் இணைந்து போட்டியிடவுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சருமான கோபால் ராய் வரும் மக்களவைத் தெரிவித்தாா்.

 நமது நிருபர்

புது தில்லி: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி,பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி, காங்ரஸுடன் இணைந்து போட்டியிடவுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் முக்கிய தேசியக் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு, மக்களவைத் தோ்தல் வியூகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக கடந்த திங்கள்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும்,

அமைச்சருமான கோபால் ராய் செய்தியாளா்களைச் சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா, குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மக்களவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் கட்சியுடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவாா்த்தை சாதகமாக முடிந்துள்ளது. இந்த 5 மாநிலங்களில் தில்லி மற்றும் பஞ்சாப்பில் தற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், மக்களவைத் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை காங்கிரஸுடன் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் குறித்து அடுத்த சந்திப்பில் பேசப்படும். கூட்டணியில் இருக்கும்போது, அதிகாரப்பூா்வ நிலைப்பாட்டை இரு கட்சிகளும் எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் கோபால் ராய்.

தில்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் அந்த மாநிலங்களின் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் வெளிப்படையான விமா்சனத்தை முன்வைப்பதும், பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

SCROLL FOR NEXT