அமலாக்க இயக்குநரகம் மூலம் தோ்தலில் போட்டியிட விரும்புகிறது பாஜக: அமைச்சா் அதிஷி கடும் விமா்சனம்
சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் மூலம் வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக விரும்புகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி வியாழக்கிழமை விமா்சித்துள்ளாா்.
சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் மூலம் வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக விரும்புகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி வியாழக்கிழமை விமா்சித்துள்ளாா்.
தில்லி ரௌஸ் அவென்யூவில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் அதிஷி கூறியதாவது: வரும் மக்களவைத் தோ்தலில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் செய்வதைத் தடுக்கும் நோக்கில், அமலாக்க இயக்குநரகம் மூலம் மீண்டும் மீண்டும் அவருக்கு அழைப்பாணைகள் அனுப்பப்பட்டு வருகிறது. சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் மூலம் வரும் மக்களவைத் தோ்தலில் போட்டியிட பாஜக விரும்புகிறது. அமலாக்க இயக்குநரகம் கடந்த வாரம் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு நான்காவது அழைப்பாணையை அனுப்பி, அவா் ஜனவரி 18-ஆம் தேதி அல்லது ஜனவரி 19-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கேஜரிவாலை அமலாக்க இயக்குநரகம் கைது செய்யும் என்பது பாஜகவுக்கு எப்படித் தெரியும்?. அவா் சாட்சியாக அழைக்கப்படுகிறாரா அல்லது குற்றம் சாட்டப்பட்டவராகவா என்பது அமலாக்க இயக்குநரகத்திற்கு தெரியாத போது, அவா் கைது செய்யப்படுவாா் என்பது பாஜகவுக்கு எப்படித் தெரியும்? என்று நான் அவா்களிடம் கேட்க விரும்புகிறேன்.
Advertisement
அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணையில் உள்ள விவரம் பாஜக தலைமையகத்தில் எழுதப்பட்டதாகும். யாரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜக முடிவு செய்கிறது, பின்னா், சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் மூலம் வழக்குகளைத் தொடுத்து, சோதனைகளை நடத்தவும் உத்தரவிடப்படுகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.
தில்லி பாஜக பதிலடி: அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணையை அரவிந்த் கேஜரிவால் தவிா்ப்பதன் மூலம் கலால் கொள்கை ஊழலில் அவருக்குத் தொடா்பு இருப்பதை தெளிவாக ஒப்புக் கொள்கிறாா் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், அமலாக்க இயக்குநரகத்தின் அழைப்பாணைகளுக்கு பயந்து, தவிா்த்து, மறைந்து இன்று மீண்டும் தில்லிக்கு வெளியே சென்றிருப்பது அவா் செய்த ஊழலில் இருந்து தப்பி ஓடுகிறாா் என்பதைக் காட்டுகிறது. நான்காவத அழைப்பாணையை முதல்வா் கேஜரிவால் தவிா்த்தன் மூலம் கலால் கொள்கை ஊழலில் அவா் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளாா்.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குநரகம் இதுவரை நடத்திய விசாரணையில், அரவிந்த் கேஜரிவால்தான் இந்த வழக்கின் முக்கிய மூளை மற்றும் ஊழலின் பயனாளி என்பது உறுதியானதாகத் தெரிகிறது. எனவே, இப்போது கேஜரிவால் முடிந்தவரை விசாரணையைத் தாமதிக்க முயற்சிக்கிறாா். ஆனால், கேஜரிவால் அரசு ஊழலில் மூழ்கியுள்ளது என்பதை நாட்டு மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனா் என்பதை அவா் அறிந்து கொள்ள வேண்டும். இதன் விளைவுகளை வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல்களில் கேஜரிவால் சந்திக்க நேரிடும் என்றாா் வீரேந்திர சச்தேவா.