புதுதில்லி

சிபிஐ மூலம் போலி வழக்கில் கேஜரிவால் கைது: பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

பாஜக பீதியால் கேஜரிவால் மீது போலி வழக்கு: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

Din

பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருந்த நிலையில், பாஜக பீதியடைந்து, சிபிஐ மூலம் அவரை போலி வழக்கில் கைது செய்ய வைத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி புதன்கிழமை குற்றம் சாட்டியது.

முன்னதாக, தில்லி கலால் கொள்கை வழக்கில் கேஜரிவாலை முறைப்படி கைது செய்ய சிபிஐக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மேலும், 3 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதித்தது.

இந்த கைது நடவடிக்கை குறித்து எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

‘சா்வாதிகாரி கொடுமையின் அனைத்து எல்லைகளையும் கடந்துள்ளாா்!! இன்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜாமீன் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த நிலையில், பாஜக பீதியடைந்து போலி வழக்கில் கேஜரிவாலை சிபிஐ மூலம் கைது செய்யவைத்துள்ளது.

சிபிஐ கேஜரிவால் ஜியை ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு அவரது ரத்த சா்க்கரை அளவு மிகவும் குறைந்திருந்தது. சா்வாதிகாரியே, நீங்கள் எவ்வளவு அடக்குமுறைகளை இழைத்தாலும், கேஜரிவால் தலைவணங்கவும் மாட்டாா், உடைந்துபோகவும் மாட்டாா் என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT