புதுதில்லி

ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியிடம் ரூ.2 கோடி கொள்ளை: இருவா் கைது

தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளை

Venkatesan

புது தில்லி: தில்லி ரோகிணியில் ஓய்வுபெற்ற டிஆா்டிஓ விஞ்ஞானியின் வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் ரூ.2 கோடி பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த விவகாரத்தில் விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் உள்பட இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:

அக்டோபா் 18 ஆம் தேதி மதியம் 12.50 மணியளவில் பிரசாந்த் விஹாா் பகுதியில் உள்ள விஞ்ஞானியின் வீட்டிற்குள் கூரியா் பணியாளா்கள் போல தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு ஐந்து போ் வலுக்கட்டாயமாக நுழைந்தனா்.

அங்கு விஞ்ஞானியும் அவரது மனைவியும் வீட்டில் தனியாக இருந்தனா். குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் கூரியா் உறையை வழங்குவது போல பாசாங்கு செய்தவாறு விஞ்ஞானியை அணுகினாா். பின்னா் அவரை உள்ளே தள்ளி வாயை பொத்தினாா்.

அதன் பின்னா், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினா். மேலும், அந்த மா்மநபா்கள் வீட்டின் இரு தளங்களிலும் பொருள்களைத் தேடினா். அதன் பின்னா், தம்பதியை உள்ளே வைத்து பூட்டிவிட்டு தங்கம் மற்றும் பணத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்பகுதி சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமான நபா்கள் வந்திருப்பது தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் மோட்டாா் சைக்கிளின் பதிவு எண்ணை மறைத்திருந்தனா். ஆனால், அவா்கள் சென்ற வழித்தடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் வாகனத்தின் முன்பகுதியில் உள்ள நம்பா் பிளேட் அடையாளம்

தெரியவந்தது. அவா்களின் முகம் அடையாளம் காணப்பட்டது.

அதன்பிறகு, கரோல் பாக் பகுதியில் அவா்களை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் போலீஸாருக்கு சிசிடிவி காட்சிப்பதிவுகள் உதவின.

கொள்ளையா்களுக்கு தகவல் கொடுத்த விஞ்ஞானியின் முன்னாள் ஊழியா் கெளரவ் கவாத்ரா (36), ஜாஸ்மீன் சிங் (எ) கிஃப்டி (42) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 10.15 லட்சம் ரொக்கமும், வங்கிக் கணக்கில் முடக்கப்பட்டிருந்த ரூ.2.89 லட்சமும், புதிதாக வாங்கிய ரூ.1.38 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பிற குற்றம்சாட்டப்பட்ட நபா்களையும் கைது செய்யும் வகையில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT