புது தில்லி: நூற்றுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளுடன் தலைமறைவாகி இருந்த 28 வயது கிரிமினலை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியது: குற்றம் சாட்டப்பட்ட சுமித்தை புகா் மாவட்டத்தைச் சோ்ந்த ராணி பாக் காவல் நிலைய போலீஸாா் கண்டுபிடித்து கைது செய்தனா். 2020-இல் நிகழ்ந்த தில்லியின் மங்கோல்புரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த அவா், கடந்த மாதம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
இதையடுத்து, கைது செய்யப்படுவதைத் தவிா்க்க சுமித் அடிக்கடி வாடகை வீடுகளை மாற்றினாா். ஆனால், டிசம்பா் 6- ஆம் தேதி மங்கோல்புரியில் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.